டைப்ரைட்டிங் தேர்வில் ஏராளமானோர் பங்கேற்பு
கீழக்கரை : அரசு டைப்ரைட்டிங் தேர்வுகள் மார்ச் 1, 2ல் ராமநாதபுரம் மையம் சார்பில் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது. கீழக்கரை, பரமக்குடி ஆகிய இடங்களில் 3000 பேர் கலந்து கொண்டனர். டைப்ரைட்டிங் தேர்வுகள் தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவில் நேற்று முன்தினம் இளநிலை 3 தொகுதிகளாகவும், முதுநிலை இரண்டு தொகுதிகளாகவும், நேற்று இளநிலை இரண்டு தொகுதிகளாகவும், முதுநிலை இரண்டு தொகுதிகளாகவும் மற்றும் உயர் வேக தேர்வுகள் இரண்டு தொகுதிகளாகவும் நடந்தது.கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சேக் தாவூத், முதன்மை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், ராமநாதபுரம் மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.