உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மார்கழி அமாவாசை: அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடினர்

மார்கழி அமாவாசை: அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடினர்

ராமேஸ்வரம்: மார்கழி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர்.பின் அக்னி தீர்த்த கடலில் 'சிவசிவ' என உச்சரித்தபடி புனித நீராடினார்கள். இதன் பிறகு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையிலும் பக்தர்கள் காத்திருந்து பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேல வாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை