உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் நகராட்சியில் வாறுகால் சேதம்: மக்கள் பீதி

ராமேஸ்வரம் நகராட்சியில் வாறுகால் சேதம்: மக்கள் பீதி

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் நகராட்சி வாறுகால் மூடி உடைந்து கிடப்பதால் மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.ராமேஸ்வரம் நகராட்சி கிழக்கு தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இத்தெரு சாலை வழியாக பக்தர்கள் நடந்து அக்னி தீர்த்த கடற்கரை, கோயில் ரத வீதிக்கு செல்வது வழக்கம். ஆனால் தெரு சாலையோர நகராட்சி வாறுகாலில் ஒருசில இடத்தில் மூடி உடைந்துள்ளது.உடைந்த சிமென்ட் சிலாப் மூடியின் இரும்பு கம்பிகள் வெளியில் நீண்டு கொண்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் பாதசாரிகள், டூவீலரில் செல்பவர்கள் பள்ளத்தில் இடறி விழுந்து காயம் அடைகின்றனர். இதனை சரி செய்ய இப்பகுதி மக்கள் பல முறை வலியுறுத்தியும் நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் இரவில் பள்ளத்தில் யாரேனும் விழுந்தால் விபரீதம் ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். எனவே சேதமடைந்த வாறுகால் மூடியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை