உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஒப்பிலான் முதல் முந்தல் வரை ரோட்டோரம் ஆக்கிரமிப்புகள்

ஒப்பிலான் முதல் முந்தல் வரை ரோட்டோரம் ஆக்கிரமிப்புகள்

சாயல்குடி: ஒப்பிலான் முதல் முந்தல் வழியாக வாலிநோக்கம் வரை அருப்புக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.ஒப்பிலான், மாரியூர், மேலமுந்தல், கீழமுந்தல் உள்ளிட்ட பகுதிகளில் பிரதானமாகச் செல்லும் நெடுஞ்சாலை துறையின் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் புதிதாக உருவெடுக்க துவங்கியுள்ளனர்.வேகமாக செல்லக்கூடிய வாகனங்கள் ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. அரசு அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்யும் தனி நபர்களால் பிரச்னைக்கு வழிவகுக்கிறது.எனவே தொடரும் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி