உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரூ. 5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்

ரூ. 5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்

ராமேஸ்வரம்,:ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை வீரர்கள் நேற்று மாலை கடலோரத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட போது சந்தேகத்துக்குரிய நாட்டுப்படகை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த இருவர் தப்பி ஓடினர். பின் படகை சோதனையிட்டதில் மத்திய அரசு தடை செய்த கடல்அட்டை 400 கிலோ உயிருடன் இருந்ததை பறிமுதல் செய்து படகுடன் மண்டபம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம். மறைவான இடத்தில் பதப்படுத்தி இலங்கைக்கு கள்ளத்தனமாக படகில் கடத்தி செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டனர். இதில் தொடர்புடையவர்கள் குறித்து மேல்விசாரரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ