உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கை கப்பல் வேண்டுமென்றே மோதி மூழ்கடித்தது 2 மீனவர்கள் வாக்குமூலம்

இலங்கை கப்பல் வேண்டுமென்றே மோதி மூழ்கடித்தது 2 மீனவர்கள் வாக்குமூலம்

ராமேஸ்வரம்:நடுக்கடலில் தங்கள் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் வேண்டுமென்றே மோதி மூழ்கடித்ததாக மீட்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் இருவர் இலங்கை நீதிமன்றத்தில் நீதிபதியிடம் வேதனை தெரிவித்தனர்.நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் விசைப்படகை இலங்கை கடற்படை வீரர்கள் கப்பலைக் கொண்டு மோதி மூழ்கடித்தனர். இதில் மீனவர் மலைச்சாமி உயிரிழந்தார். மற்றொரு மீனவரான ராமச்சந்திரன் உடலை இலங்கை வீரர்கள் தேடி வருகின்றனர்.இந்நிலையில் கடலில் தத்தளித்த மீனவர்கள் மூக்கையா, முத்துமுனியாண்டியை இலங்கை வீரர்கள் மீட்டு நேற்று இரவு 7:15 மணிக்கு ஊர்க்காவல்துறை நீதிபதி நளினி சுபாஸ்கரன் முன்பு ஆஜர்படுத்தினர்.மீனவர்களிடம் நீதிபதி விசாரித்த போது, 'எங்கள் படகு மீது இலங்கை கடற்படையினர் கப்பலால் வேண்டுமென்றே மோதி மூழ்கடித்து விட்டனர். இதில் இரு மீனவர்கள் உயிரிழந்து விட்டனர் என வேதனையுடன் தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் ஊர்காவல்துறை போலீஸ் காவலில் வைக்கவும், இன்று (ஆக.,2) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்