மேலும் செய்திகள்
யானை வாகனத்தில் விநாயகர் ஊர்வலம்
04-Sep-2024
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு இரு தேவியருடன் நாளை (செப்.5) திருக்கல்யாணம் நடக்கிறது.ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த மூலவர் விநாயகர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமையப் பெற்றுள்ளதால் வெயிலுகந்த விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.மேலும் சீதா பிராட்டியை மீட்பதற்காக ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்கு முன் இந்த விநாயகரை வணங்கி சென்றதாக கூறப்படுவதால் சிறப்புமிக்க கோயிலாக உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த கோயிலில் ஆண்டு தோறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடக்கிறது.இங்கு ஆக.29 ல் கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா துவங்கியது. தினமும் மாலையில் வெள்ளி மூஷிகம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.எட்டாம் நாளான நாளை மாலை 4:30 மணிக்கு சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
04-Sep-2024