உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சர்வாதிகார தேசமாக மாற்ற முயற்சி

சர்வாதிகார தேசமாக மாற்ற முயற்சி

பரமக்குடி : பரமக்குடியில் இண்டியா கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனிக்கு ஆதரவாக காங்., தலைவர் செல்வப் பெருந்தகை பிரசாரம் செய்தார்.அவர் பேசியதாவது: ஒவ்வொருவரின் தலை மீதும் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வைத்துள்ளார் மோடி. ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்குமான தேர்தல் இது. மக்களிடமிருந்து எடுப்பவர் மோடி, கொடுப்பவர் ராகுல் என்றார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எல்லா கட்சிகளையும் அபகரிக்க நினைப்பவர் மோடி. மாநில அதிகாரங்களை பறிக்க வேண்டும். தமிழை கொச்சைப்படுத்தி சமஸ்கிருதத்தை வளர்க்கும் முயற்சியில் மோடி உள்ளார். அதற்கு ஊதுகுழலாக அண்ணாமலை உள்ளார். இந்த தேசத்தை சர்வாதிகார தேசமாக மாற்றும் திட்டத்துடன் செயல்படுகிறார்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை