உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முருகன் கோயில்களில்வளர்பிறை சஷ்டி வழிபாடு

முருகன் கோயில்களில்வளர்பிறை சஷ்டி வழிபாடு

ராமநாதபுரம்: வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு, ராமநாதபுரம் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் அபிேஷக, பூஜை வழிபாடு, அன்னதானம் நடந்தது.நேற்று சஷ்டியை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத குமரய்யாசுவாமி கோயிலில் காலையில் பால், தயிர், சந்தனம், பழங்களால் சுவாமிக்கு அபிேஷகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.இதுபோல ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில், வழிவிடு முருகன் கோயில், முகவை ஊருணி பாலசுப்பிரமணியசுவாமி கோயில், வெளிப்பட்டனம் பாலசுப்பிரமணியம்சுவாமி, பாலதண்டயுதபாணி சுவாமி கோயில் மற்றும் பட்டணம்காத்தான் வினைதீர்க்கும் வேலவர் கோயிலில் அபிேஷக, அலங்காரத்தல் பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ