உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வண்டிக்காரத் தெருவில் வாகனங்களில்போக முடியல: அளவில்லா ஆக்கிரமிப்பு

வண்டிக்காரத் தெருவில் வாகனங்களில்போக முடியல: அளவில்லா ஆக்கிரமிப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர் வண்டிக்காரத் தெருவில் நாளுக்கு நாள் ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் பள்ளிகள், நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், கிளை சிறைச்சாலை, ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம், ஏராளமான வணிக வளாகங்கள் உள்ளன. இதனால் இப்பகுதியில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்நிலையில் ரோட்டின் இருபுறங்களிலும் கண்டபடி டூவீலர்கள், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். சில கடைக்காரர்கள் ரோடு வரை கூரையை நீட்டி அமைத்துள்ளனர். இதனால் வண்டிக்காரத் தெருவில் பள்ளி, அலுவலகம் நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி