உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உத்தரகோசமங்கையில் பக்தர்கள் கூட்டம் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம்

உத்தரகோசமங்கையில் பக்தர்கள் கூட்டம் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம்

உத்தரகோசமங்கை: -உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.இக்கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம்.இங்கு ராமாயண இதிகாசத்துடன் தொடர்புடைய விஷயங்கள் உள்ளடங்கியுள்ளது. சமீபத்தில் ஜன., 12,13ல் நடந்த ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் வந்தனர்.இந்நிலையில் தொடர் விடுமுறையால் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமியை தரிசனம் செய்வதற்கும் புதிய சந்தனம் காப்பிடப்பட்ட பச்சை மரகத நடராஜரின் பூட்டப்பட்ட சன்னதியில் தரிசனம் செய்வதற்கும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.புறக்காவல் நிலையம் வேண்டும்: நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக உத்தரகோசமங்கை வரும் நிலையில் அப்பகுதியில் போலீசாரின் புறக்காவல் நிலையம் அவசியத் தேவையாக உள்ளது. இதனால் கோயிலுக்கு முன்பாக நிறுத்தக்கூடிய வாகனங்களை முறைப்படுத்தவும், பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்துவதற்கும் பயனுள்ளதாக அமையும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை