மேலும் செய்திகள்
'ஷாக்' அடிக்கும் மின்கம்பங்கள்
14-Sep-2024
முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே சாத்தனுார் கிராமத்தில் விவசாய நிலத்தில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைத்தனர்.முதுகுளத்துார் அருகே சாத்தனுார் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. 150-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், மிளகாய், பருத்தி உட்பட சிறுதானியப் பயிர்கள் விவசாயம் செய்கின்றனர்.கிராமத்திற்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடி மின்நிலையத்திலிருந்து மின் கம்பங்கள் வழியாக மின்சப்ளை செய்யப்படுகிறது. கடந்த பல மாதங்களாகவே விவசாய நிலத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து ஆபத்தான நிலையில் இருந்தன. இதனால் விவசாயம் செய்வதற்கு மக்கள் அச்சப்பட்டனர்.விளைபொருட்களை கொண்டு செல்வதற்கு வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சாய்ந்துள்ள மின்கம்பங்களை மின்வாரியத்தினர் சீரமைத்தனர்.
14-Sep-2024