உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செய்யாமங்களத்தில் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா

செய்யாமங்களத்தில் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே செய்யாமங்களம் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூங்குழலி அம்மன் கோயில் பொங்கல் விழா, அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது.அபிராமம் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் பிடிமண் வழங்கப்பட்டது. கிராம மக்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். அபிராமத்தில் தயார் செய்யப்பட்ட குதிரைகள், தவழும் பிள்ளைகள் சுப்பிரமணிய சுவாமி கோயில், சப்பாணி கோயில், பஸ் ஸ்டாண்ட், மேலக்கொடுமலுார் குமரக்கடவுள் கோயில் வழியாக செய்யாமங்களம் கிராமத்திற்கு ஊர்வலமாக துாக்கி வந்தனர்.கண் திறப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்பு கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக குதிரைகளை துாக்கி வந்து கடந்த ஆண்டு விளைந்த தானியங்கள் வைத்து அய்யனார் கோயிலில் வழிபட்டனர். கோயிலில் கிராம மக்கள் பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.பின் மூலவரான பூங்குழலி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. செய்யாமங்களம் சுற்றியுள்ள கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை