பின்லேடனுக்கு ஆதரவாக பதிவிட்டவர் மீது வழக்கு
திருவாடானை,:பயங்கரவாதத்தை துாண்டும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மங்களக்குடியை சேர்ந்தவர் முஜிபுகி. இவரது இன்ஸ்டாகிராமில் ஒசாமா பின்லேடன், ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் ஆகியோருக்கு ஆதரவான வாசகங்கள் கொண்ட பதிவு செய்தார். இப்பதிவு பயங்கரவாதத்தை துாண்டும் வகையில் அமைந்திருந்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் உத்தரவின் பேரில் திருவாடானை போலீசார் முஜிபுகி மீது வழக்குப்பதிந்துள்ளனர்.