மேலும் செய்திகள்
ஆக.,15ல் கிராம சபை கூட்டம்
13-Aug-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் நாளை (ஆக.,15) சுதந்திர தினத்தன்று காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தர விட்டுள்ளார். கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, துாய்மையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், ஜல் ஜீவன் திட்டப் பணி உள்ளிட்டவை கிராம சபையில் விவாதிக்கப்பட வேண்டும். மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
13-Aug-2025