மேலும் செய்திகள்
கொள்முதல் நிலையத்தில் 3771 டன் நெல்
28-Mar-2025
திருவாடானை: கால்நடைகளுக்கான காப்பீட்டு திட்டத்திற்கு ஏப்.24 க்குள் பதிவு செய்ய அறிவிக்கப்பட்டும் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ஒருவர் கூட பதிவு செய்யவில்லை.கால்நடைகளுக்கு வானிலை அடிப்படையிலான காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனமான இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம், மாடுகள் மற்றும் எருமைகளுக்கு வானிலை காப்பீட்டு திட்டத்தை அறிமுகபடுத்தியுள்ளது. கோடை காலத்தில் வெப்ப நிலை உயரும் போது கால்நடைகள் பாதிக்கப்படும். இது கால்நடை விவசாயிகளுக்கு குறிப்பாக கோடைகால வெயில் மற்றும் பிற வானிலை மாற்றங்களால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை இதன் மூலம் சரி செய்து கொள்ளலாம். ஒரு கால்நடைக்கு காப்பீட்டு தொகை ரூ.10 ஆயிரம். காப்பீட்டு கட்டணம் ரூ.600. விவசாயிகள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் கொடுத்து ஏப்.24க்குள் பதிவு செய்து கொள்ளலாம். தாலுகா அளவில் வெப்ப நிலையை பொறுத்து ஏதேனும் மாற்றம் இருப்பின் இழப்பீடு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.ஆனால் இத் திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் ஆர்வம் இல்லை. காப்பீட்டு திட்ட அலுவலர்கள் கூறியதாவது:கால்நடை வளர்ப்பவர்களுக்கு பயன் உள்ள திட்டமாக அறிவிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களில் ஒருவர் கூட பதிவு செய்யவில்லை. பனைக்குளம், முதுகுளத்துார் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் 60 பேர் மட்டும் பதிவு செய்துள்ளனர் என்றனர்.
28-Mar-2025