பள்ளி வாகனம் மோதிய விபத்தில் மீனவர் பலி
பெரியபட்டினம்: பெரியபட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் சீனி அமானுல்லாகான் 65. மீனவரான இவர் நேற்று பெரியபட்டினத்தில் இருந்து ரெகுநாதபுரம் சென்று விட்டு களிமண்குண்டு வடிவேல் 50, என்பவரை உடன் அழைத்துக் கொண்டு டூவீலரில் பெரியபட்டினம் நோக்கி சென்றார். முத்துப்பேட்டை அருகே சாலைத்தோட்டம் பகுதியில் சென்றனர். அப்போது நேற்று மாலை 6:30 மணிக்கு அது வழியாக பள்ளி மாணவர்களை இறக்கி விட்டு எதிரே வந்த பள்ளி வேன் மோதியதில் டூவீலர் ஓட்டிய சீனி அமானுல்லா கான் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உடன் பயணித்த வடிவேல் காயமடைந்தார். அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருப்புல்லாணி போலீசார் விசாரிக்கின்றனர்.