உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பனில் மீன்கள் வரத்து அதிகரிப்பு: மீனவர்கள் குஷி

பாம்பனில் மீன்கள் வரத்து அதிகரிப்பு: மீனவர்கள் குஷி

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் விசைப்படகுகள் வலையில் அதிக மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.பிப்., 11ல் பாம்பனில் இருந்து 90 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்வளம் நிறைந்த மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடித்து நேற்று காலை பாம்பன் கரை திரும்பினார்கள். இதில் பெரும்பாலான படகில் வெளமீன், சீலா, பாரை, குமலா உள்ளிட்ட பலவகை மீன்கள் அதிக அளவில் சிக்கின.இம்மீன்களை ராமேஸ்வரம், பாம்பன் வியாபாரிகள் வாங்கி ஐஸ்ஸில் பதப்படுத்தி கேரளா, கோவை மீன் மார்க்கெட்டுக்கு அனுப்பினர். மீன்களுக்கு உரிய விலை கிடைத்ததாலும், அதிக மீன்கள் சிக்கியதாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ