டைப்ரைட்டிங் தேர்வில் ஏராளமானோர் பங்கேற்பு
கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று மற்றும் இன்று ஆகிய இரு தினங்களில் அரசு டைப்ரைட்டிங் தேர்வுகள் நடந்தது. ராமநாதபுரம் மையம் சார்பில் கீழக்கரை மற்றும் பரமக்குடியில் 3000 பேருக்கும் அதிகமானோர் தேர்வில் கலந்து கொண்டனர். டைப்ரைட்டிங் தேர்வுகள் தமிழ், ஆங்கிலம் படப்பிரிவில் நேற்று இளநிலை மூன்று தொகுதிகளாகவும், முதுநிலை இரண்டு தொகுதிகளாகவும், இன்று இளநிலை இரண்டு தொகுதிகளாகவும், முதுநிலை இரண்டு தொகுதி களாகவும் மற்றும் உயர் வேக தேர்வுகள் இரண்டு தொகுதிகளாகவும் நடக்கிறது. தேர்தலில் பங்கேற்கும் மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகத்தில் ஆறு மாதம் பயிற்சி பெற்றுள்ளனர். ராமநாதபுரம் மையத்தில் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சேக் தாவூத், முதன்மை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், ராமநாதபுரம் மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்க நிர்வாகிகளான சரவணபவா, முருகபூபதி, குஞ்சரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.