முளைப்பாரி ஊர்வலத்தை வரவேற்ற முஸ்லிம்கள்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் முளைக்கொட்டுவிழாவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில்முஸ்லிம்கள் முளைப்பாரி ஊர்வலத்திற்கு வரவேற்பு அளித்தனர். ராமநாதபுரம் புளிக்காரத்தெரு முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிமாதம் முளைக்கொட்டு விழா நடக்கிறது. நேற்று முன்தினம் (ஆக.,5)அபிேஷக பூஜைகளும், இரவு அம்மன் அலங்கார ரதத்தில் முக்கியவீதிகளில் வலம் வந்தார். நேற்று (ஆக.,6) மாலை நொச்சியூருணியில்பூஜை செய்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். சின்னக்கடை வீதி வழியாக வந்த போது பாசிப்பட்டறை ஜமாத்நிர்வாகம் மற்றும் அப்பகுதி முஸ்லிம் மக்கள் சார்பில் பக்தர்களுக்குவரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு சால்வை அணிவித்தும்,குளிர்பானங்கள் வழங்கியும் மரியாதை செய்தனர். இதனை அடுத்து முத்துமாரியம்மனுக்கு அபிேஷகம் அலங்காரத்தில் பூஜைகள்நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.