உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கூட்டுறவு வங்கியில் நிரந்தர கூடாரம் அமைத்த அதிகாரிகள் தினமலர் செய்தி எதிரொலி

கூட்டுறவு வங்கியில் நிரந்தர கூடாரம் அமைத்த அதிகாரிகள் தினமலர் செய்தி எதிரொலி

முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதுகுளத்துார் கிளை வளாகத்தில் நிரந்தர கூடாரம் அமைத்து பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டுள்ளன.ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதுகுளத்துார் கிளை தாலுகா அலுவலகம் அருகே செயல்படுகிறது. இங்கு முதுகுளத்துார் வட்டாரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வங்கியில் கணக்கு வைத்து வரவு செலவு செய்கின்றனர். தினந்தோறும் வங்கிக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். வங்கியில் போதுமான இருக்கை வசதி இல்லாததால் மக்கள் வெளியில் மரத்தடியில் காத்திருக்கும் அவல நிலை இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக செய்தி வெளியான அன்றே வங்கி பணியாளர்கள் வளாகத்தில் தற்காலிக கூடாரம் அமைத்து பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டன. தற்போது வளாகத்தில் நிரந்தர கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிக்கு வரும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை