உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மது போதையில் வாலிபர் கொலை: ஒருவர் கைது

மது போதையில் வாலிபர் கொலை: ஒருவர் கைது

உச்சிப்புளி:ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சாத்தக்கோன்வலசை ஊராட்சி தில்லைநாச்சியம்மன் கோயில் குடியிருப்பைச் சேர்ந்த நாகரத்தினம் மகன் குழந்தைவேலு 33. இவரது வீடு அருகே வசிக்கும் சேகர் மகன் சரவணன் 34. இருவரும் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு வீடு அருகே மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கோழி வெட்டும் கத்தியால் குழந்தைவேலு மார்பில் சரவணன் குத்தினார். இதில் சம்பவயிடத்திலேயே குழந்தைவேலு பலியானார். சரவணனை உச்சிப்புளி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி