உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தனுஷ்கோடி சாலையில் மணல் குவியல்

 தனுஷ்கோடி சாலையில் மணல் குவியல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மணல் குவிந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர். கடந்த சில நாட்களாக தனுஷ்கோடியில் வீசிய சூறாவளியால் மணல் புயல் வீசியது. இதனால் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பல இடங்களில மணல் பரவலக குவிந்துள்ளது. இதனால் வாகனங்களில் செல்லும் போது நிலை தடுமாறுவதால் எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குவிந்து கிடக்கும் மணலை அகற்றுவதற்கு சுற்றுலா ஆர்வலர்கள் பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் வாகனங்கள் சிரமத்துடன் செல்வதால் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி