மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
19 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
19 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
19 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
19 hour(s) ago
ராமேஸ்வரம்:ஸ்ரீ ராமர், ராவணனை வதம் செய்த பின் அந்த தோஷம் நீங்க சிவனை பூஜித்த ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களில் இன்று(ஜன.,20) பிரதமர் மோடி புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார்.ராமர் இலங்கை மன்னன் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு ராமேஸ்வரம் வந்தார். சிவபக்தரான ராவணனைக் கொன்றதால் ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக சிவபெருமானை பூஜை செய்ய முடிவெடுத்தார்.இதற்காக சிவலிங்கம் எடுத்து வரச்சொல்லி ஹனுமனை கைலாய மலைக்கு சீதாதேவி அனுப்பினார். ஆனால் ஹனுமன் வர தாமதமானதால் சீதை கடற்கரை மணலில் சிவலிங்கம் வடிவமைத்து பூஜை செய்து அனைவரும் தரிசித்தனர். இங்கு ஸ்ரீ ராமர் சிவனை பூஜித்து வணங்கியதால் சுவாமிக்கு ராமநாதசுவாமி என பெயரிட்டனர்.
அடைக்கலம் தேடி தனுஷ்கோடி வந்த ராவணன் தம்பி விபீஷணரை இலங்கை மன்னராக அறிவித்த ராமர் கடல் நீரால் பட்டாபிஷேகம் சூட்டுகிறார். சிவனின் ஆயுதமான கோதண்டம் (வில், அம்பு ) ராமரிடம் இருந்ததால் சிவ பக்தரான விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டியதால் இங்கு கோதண்ட ராமர் கோயில் உருவானது.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பாதம் பதித்த ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் இக்கோயிலின் புனிதமும், புகழும், வரலாறும் உலகம் முழுவதும் சென்றடையும் என்றார்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago