உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசியல் தலையீடு இல்லாததால் அதிக தொகைக்கு ஏலம் போன மரங்கள்

அரசியல் தலையீடு இல்லாததால் அதிக தொகைக்கு ஏலம் போன மரங்கள்

ராமநாதபுரம் : எந்த அரசியல் தலையீடும் இல்லாததால், அரசு கண்மாய்களில் கருவேல மரங்கள், வழக்கத்தை விட மூன்று மடங்கு ஏலம் போயின. தமிழகத்தில் ஆட்சி மாறியதால், கட்டப்பஞ்சாயத்து செய்ய ஆள் இல்லை. ராமநாதபுரத்தில் நடந்த ஏலத்தில் வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதற்கு முன் 75 ஆயிரத்துக்கும் குறைவாக ஏலம் போன கருவேல மரங்கள், இப்போது இரண்டு லட்சத்துக்கு மேல் ஏலம் போயின. 68 ஆயிரத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட தேர்போகி கண்மாய் மரங்கள் 2.54 லட்சத்துக்கும், 62 ஆயிரத்துக்கு விலை வைக்கப்பட்ட அம்மாரி கண்மாயில் 1.89 லட்சத்துக்கும், ஊரணிகோட்டையில் 40 ஆயிரத்துக்கும் ஏலம் போயின. இதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்