மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
19 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
19 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
19 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
19 hour(s) ago
ராமநாதபுரம் : இந்தியாவின் மன்னார் வளைகுடாவில் உள்ள உயிர்க்கோள காப்பகம் போல, இலங்கை கடற்பகுதியிலும் அமைக்கும் நடவடிக்கையில், அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. மன்னார்வளைகுடா உயிர்கோள காப்பகத்தில் 3,600க்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இவை இலங்கை கடல் பகுதியிலும் உள்ளன. அங்கும் இவை வேட்டையாடப்படுகின்றன. இவற்றை பாதுகாக்க இலங்கை அரசு, தற்போது முன்வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியா-இலங்கை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ராமேஸ்வரத்தில் நடந்தது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: மன்னார்வளைகுடா உயிர்கோள காப்பகம் போன்று, இலங்கையிலும் ஏற்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அவ்வாறு அமைக்கும் பட்சத்தில், அரிய வகை உயிரினங்கள் இலங்கை வழியாக கடத்தப்படுவது தடுக்கப்படும். இது தொடர்பாக இருநாட்டு அதிகாரிகள் கூட்டம், இலங்கையில் டிசம்பரில் நடக்கிறது, என்றார்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago