உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாலத்தில் எரியாத விளக்குகளால் விபத்து அபாயம்

பாலத்தில் எரியாத விளக்குகளால் விபத்து அபாயம்

தொண்டி : தொண்டி மணிமுத்தாறு பாலத்தில் மின்விளக்கு எரியாததால் இருளாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். இரவில் விபத்து அபாயம் உள்ளது.தொண்டி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே மணிமுத்தாறு பாலம் உள்ளது. மதுரை-தொண்டி, ராமநாதபுரம்- பட்டுக்கோட்டை செல்லும் வகையில் அமைந்துள்ளதால் 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப் பாலத்தின் வழியாக செல்கிறது. பாலம் அருகே குடியிருப்பவர்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி கொண்டு இப்பாலத்தின் வழியாக நடந்து வீடுகளுக்கு செல்வார்கள். பாலத்தின் இரு பக்கமும் சில நாட்களாக மின்விளக்கு எரியவில்லை. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தொண்டி மாலிக் கூறுகையில், இரவில் பாலத்தின் வழியாக வீட்டிற்கு நடந்து செல்லும் போது போதிய வெளிச்சம் இன்றி பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. வாகன ஓட்டிகளும் சிரமம் அடைகின்றனர். பாலத்தில் மின்விளக்குகள் எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !