உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 8.5 கிலோ கடத்தல் தங்கம் இலங்கை கடற்படை பறிமுதல் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தப்பட்ட 8.5 கிலோ தங்கம்

8.5 கிலோ கடத்தல் தங்கம் இலங்கை கடற்படை பறிமுதல் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தப்பட்ட 8.5 கிலோ தங்கம்

ராமநாதபுரம்:இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக, நுாதன முறையில் தமிழகத்திற்கு கடத்தப்பட்ட, 8.5 கிலோ தங்கக்கட்டிகளை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து தங்கக்கட்டிகள் தமிழகத்திற்கு கடத்தப்படுவதாக இலங்கை கடற்படையினருக்கு, நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, தலைமன்னார் கடற்கரையில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, மீன் பிடிப்பதற்கான மிதவை வாயிலாக இருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த மிதவையை இலங்கை கடற்படையினர் சோதனையிட்டனர். மிதவையில் அலுமினிய பெயின்ட் பூசப்பட்ட பொருட்கள் இருந்தன. அதை சோதனையிட்ட போது, தங்கக்கட்டிகளின் மீது, அலுமினிய பெயின்ட் பூசப்பட்டிருந்தது தெரிந்தது. மிதவையில் இருந்த இருவரையும் கைது செய்து, 8.5 கிலோ தங்கக்கட்டிகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 8 கோடி ரூபாய். இதுகுறித்து இலங்கை கடற்படையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை