அலைபேசி இல்லாததால் மாணவி தற்கொலை
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனியார் பள்ளி பிளஸ் 1 மாணவி சாதனா, 16. இவரது தந்தை செந்தில்குமார் இறந்துவிட்டார். தாயார் தேவி, தனியார் பள்ளியில் பணிபுரிகிறார். இந்நிலையில் சாதனா அலைபேசியில் அடிக்கடி கேம்ஸ் விளையாடி, ரீல்ஸ் பார்த்ததால் அதனை தாயார் பக்கத்துவீட்டில் தந்து விட்டு பணிக்கு சென்றார். இதனால் மனமுடைந்த சாதனா வீட்டில் இருந்த சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.