| ADDED : ஆக 20, 2024 05:50 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.பாப்பாங்குளத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கண்ணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.ஜூன் மாதம் கே.பாப்பாங்குளம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியரான கண்ணன் 51டூவீலரில் சென்ற போது கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய கே.வேப்பங்குளத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் அரியப்பன் 40, இவரது சகோதரர் முருகன் 30, முத்தலாங்குளத்தை சேர்ந்த சக்கரைசாமி மகன் வினோத்குமார் 23, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் முத்து அரியப்பன் மீது ஜூலை மாதம் குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த முருகன், வினோத்குமார் ஆகிய இருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சந்தீஷ் எஸ்.பி., கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் பரிந்துரை செய்தார். இதன் பேரில் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். மதுரை மத்திய சிறையில் உள்ள வினோத்குமாருக்கும், ராமநாதபுரம் மாவட்ட சிறையில் உள்ள முருகன் ஆகியோருக்கு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.