உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரண்மனை ரோட்டில் வாகனங்களில் போக முடியல..ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

அரண்மனை ரோட்டில் வாகனங்களில் போக முடியல..ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரண்மனை ரோட்டில் சிலர் நடுரோடு வரை கூரை அமைப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் மெயின் பஜரான அரண்மனை பகுதியை சுற்றிலும் ஏராளமான வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், ஜவுளிக்கடைகள், காய்கறி, பழங்கள் வியாபாரம் நடப்பதால் எப்போதுமே வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது.ஏற்கனவே அரண்மனை ரோட்டில் நடை பாதை, தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்கின்றனர். இவர்களில் சிலர் அத்துமீறி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் நடுரோடு வரை கூரை அமைத்துள்ளனர்.இதனால் அரண்மனை முதல் கேணிக்கரை, சாலைத்தெரு ரோட்டில் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.எனவே போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கயிறு கட்டி ஒதுக்கியுள்ள இடத்திற்குள் வியாபாரம் செய்ய வேண்டும்.மாறாக நடு ரோடுவரை ஆக்கிரமிக்கும் கடைகளை கண்டறிந்து நகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை