நடை பயிற்சி செய்தவர் ரயிலில் அடிபட்டு பலி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் மோகன் 60.இங்கு டிரைவிங் பயிற்சி பள்ளி நடத்தி வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து நடைபயிற்சிக்கு ராமநாதபுரம் ரயில் நிலையம் பகுதிக்கு சென்றவர் தண்டவாளம் வழியாக சென்றுள்ளார். அப்போது திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பயணிகள் ரயில் புறப்பட்டது. ரயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடந்து விடலாம் என நினைத்து சென்ற மோகன் ரயிலில் அடிபட்டு இறந்தார்.