பஸ் ஸ்டாண்டில் இறந்து கிடந்த பெண்
தொண்டி : தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை 60 வயதுள்ள பெண் இறந்து கிடந்தார். தகவல் கிடைத்த எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரித்தனர். சில நாட்களாக இறந்த அப்பெண் பிச்சை எடுத்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். யார் இவர், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. கிராம மக்கள் சார்பில் உடல் அடக்கம் செய்யபட்டது.