உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / கூலி தொழிலாளி வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை

கூலி தொழிலாளி வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த ஒழுகூரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முரளி, 40. இவரது மனைவி உமாராணி, 36. இருவரும் நேற்று காலை கூலி வேலைக்கு சென்ற நிலையில், அவர்களது, 9 வயது மகன், 7 வயது மகள் இருவரும் பள்ளிக்கு சென்றனர். பணி முடிந்து மாலை உமாராணி வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 20 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. வாலாஜா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை