உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / தாய் கொலையில் ஜாமினில் வந்த டிஸ்மிஸ் போலீஸ்காரர் தற்கொலை

தாய் கொலையில் ஜாமினில் வந்த டிஸ்மிஸ் போலீஸ்காரர் தற்கொலை

ஆற்காடு:ஆற்காடு அருகே, தாய் கொலையில் கைதாகி ஜாமினில் வந்த,'டிஸ்மிஸ்' போலீஸ்காரர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த சக்கரமல்லுாரை சேர்ந்தவர் தினேஷ், 34; ‍போலீஸ்காரரான இவர், மது போதையில் பணிக்கு செல்லாமல் இருந்ததால், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டவர். இவர் மனைவி இவரை பிரிந்து, தன் 3 குழந்தைகளுடன் தனியாக வசிக்கிறார். தினேஷ், தன் தாய் வாணீஸ்வரியுடன் வசித்து வந்தார். கடந்தாண்டு மார்ச், 13 ல், மது போதையில் தாயை கொலை செய்தார். ஆற்காடு தாலுகா போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். 3 மாதங்களுக்கு முன் ஜாமினில் வந்த அவர், தனியாக வசித்து வந்தார். மனவிரக்தியில் இருந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ