உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / பனை மரத்தில் மோதிய பஸ் டிரைவர் பலி; 6 பேர் காயம்

பனை மரத்தில் மோதிய பஸ் டிரைவர் பலி; 6 பேர் காயம்

ராணிப்பேட்டை:சென்னை, தாம்பரம் அருகே உள்ள படப்பையில் இயங்கும் தனியார் நிறுவன பஸ் தினமும், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் இருந்து தொழிலாளர்களை பணிக்கு அழைத்துச் செல்லும். நேற்று காலை, 5:30 மணியளவில், 20க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, சோளிங்கர் அடுத்த சின்னநாகபூடி கிராமம் அருகே சென்றபோது, பஸ் சாலையோர பனை மரத்தின் மீது மோதியது.பஸ் டிரைவர் கேசவன், 30, துாக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், கேசவன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், 6 பெண் தொழிலாளர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை