உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / உறுப்பு தானம் செய்தவர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

உறுப்பு தானம் செய்தவர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

திருவாலங்காடு:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வின்டர் பேட்டையை சேர்ந்தவர் சாந்தகுமார், 45. பெயின்டராக வேலை செய்து வந்தார்.இவர் கடந்த 9ம் தேதி மதுரையில் நடந்த கட்டடப்பணியின் போது தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட சக தொழிலாளிகள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் மூளை சாவு அடைந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க குடும்பத்தினர் முன் வந்தனர். அவரது கண்கள், இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.நேற்று உறவினர்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. உடலுக்கு அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, தாசில்தார் ஸ்ரீதேவி உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை