மேலும் செய்திகள்
அமைச்சர் ரகுபதி 'அட்மிட்'
26-Jan-2025
லாரி மோதி டிரைவர் சாவு:சென்னையை சேர்ந்த4 பேர் படுகாயம்ஆத்துார்: தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த கார் டிரைவர் ரகுபதி, 38. சென்னை, போரூரில் தங்கி பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் சென்னையை சேர்ந்த, புரு ேஷாத்தமன், திருவேங்கடம், மணிகண்டன், பிரகாஷ் ஆகியோரை, பொள்ளாச்சியில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு, 'கிரிட்டோ' காரில் ரகுபதி அழைத்துச் சென்றார். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சாமியார்கிணறு மேம்பாலத்தில் வந்தபோது, சிமென்ட் லோடுடன் முன்புறம் சென்றுகொண்டிருந்த லாரி மீது, கார் மோதியது. இதில் ரகுபதி உள்பட, 5 பேரும் படுகாயமடைந்து, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரகுபதி உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Jan-2025