உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின்னணு தராசு, குடிநீர் இன்றி தவிக்கும் உழவர் சந்தை வியாபாரிகள்

மின்னணு தராசு, குடிநீர் இன்றி தவிக்கும் உழவர் சந்தை வியாபாரிகள்

மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை உழவர் சந்தையில், மின்னணு தராசு தட்டுப்பாட்-டாலும், குடிநீர் இன்றியும் வியாபாரிகள் தவிக்கின்றனர்.சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் உழவர் சந்தை செயல்படு-கிறது. இங்கு காய்கறி, கீரை, தேங்காய், பழக்கடைகள் என மொத்தம், 65 கடைகள் உள்ளன. உழவர் சந்தைக்கு, தினமும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த, மக்கள் வந்து செல்கின்-றனர். இங்கு குடிநீர் வசதி செய்து தரப்படாததால், வியாபாரிகள் விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.கடைகளுக்கு ஏற்ப, காய்கறிகளை எடை போட போதிய எண்-ணிக்கையில் மின்னணு தராசுகள் இல்லை. எனவே, சம்மந்தப்-பட்ட அதிகாரிகள் போதிய எண்ணிக்கையில், மின்னணு தராசு மற்றும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து, இளம்பிள்ளை உழவர் சந்தை அதிகாரி ஒருவர் கூறி-யதாவது:உழவர் சந்தைக்கு சுற்றுவட்டாரங்களை சேர்ந்த, 3,000க்கும் மேற்-பட்ட மக்கள் தினமும் வருகின்றனர். 15 டன் காய்கறிகள் வரத்தா-கிறது. தினமும் நான்கு லட்சம் ரூபாய்க்கு காய்கறி, பழங்கள் விற்-பனையாகிறது. விரைவில் ஆர்.ஓ. வாட்டர் வசதி செய்து தரப்-படும். தற்போது உழவர் சந்தையில், 34 மின்னணு தராசுகள் உள்-ளன. புதிதாக, 16 வாங்கப்பட்டுள்ளன. அவை விரைவில் விவசா-யிகளுக்கு வழங்கப்படும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ