இ.பி.எஸ்., ஆட்சி சாதனைதுண்டு பிரசுரம் வழங்கல்
இ.பி.எஸ்., ஆட்சி சாதனைதுண்டு பிரசுரம் வழங்கல்சேலம், :அ.தி.மு.க.,வின் சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், அக்கட்சி பொதுச்செயலர் இ.பி.எஸ்., ஆட்சியில் செய்த சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி, கொண்டலாம்பட்டியில் நேற்று நடந்தது. மாநகர பொறுப்பாளர்கள் செல்வராஜ், பாலு தலைமை வகித்தனர். இதில் கட்சியினர், வீடு வீடாக சென்று, துண்டு பிரசுரங்களை மக்கள், கட்சியினரிடம் வழங்கினர். எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ., ரவிச்சந்திரன், பகுதி செயலர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.