உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் ஊதிய உயர்வுக்கு போராட்டம்

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் ஊதிய உயர்வுக்கு போராட்டம்

சேலம், தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், ஊதிய உயர்வு கேட்டு, சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று போராட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் ராஜேந்திரன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தில், 2008 முதல் 108 ஆம்புலன்ஸ் சேவை அமலில் உள்ளது. அப்பணியில், 6,000க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் இரவு, பகலாக ஷிப்ட் முறையில் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு நடப்பு 2025-26ல், அரசு வழங்கிய 16 சதவீத ஊதிய உயர்வை, ஆம்புலன்ஸ் நிர்வாகம் 10 சதவீதமாக குறைத்து வஞ்சித்துள்ளது. எனவே, அறிவித்த ஊதிய உயர்வை உடனடியாக வழங்குவதுடன், தொழிற்சங்கத்துடன் பேச்சு நடத்தி விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, ஊதிய உயர்வை, 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். இல்லையனில் அக்., 18 ல், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு பேசினார். மண்டல செயலர் வேலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ