உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரேஷன் அரிசி கடத்திய 12 பேருக்கு குண்டாஸ்; 270 வாகனம் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்திய 12 பேருக்கு குண்டாஸ்; 270 வாகனம் பறிமுதல்

சேலம், சேலம் சரகத்தில் ரேஷன் அரிசி கடத்திய 12 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன தணிக்கையில், கடந்த 9 மாதங்களில், 504 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய, 207 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட, 1,001 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிசி கடத்தலில் ஈடுபட்ட, 12 பேர் குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட, 596 வாகனங்கள், ரூ.1 கோடிக்கு ஏலம் போனது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி