மேலும் செய்திகள்
மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்
02-Oct-2024
கால்வாய், குடிநீருக்குரூ.2 கோடி ஒதுக்கீடுசேலம், அக். 25-சேலம் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நேற்று நடந்தது. தலைவி ரேவதி தலைமை வகித்தார். அதில் பெரிய சோரகை பெருமாள் கோவிலுக்கு சரியான சாலை வசதிக்கு நடவடிக்கை எடுத்தல்; மழைக்காலமாக உள்ளதால் கிராம சாலைகள் சீரமைத்தல்; மாவட்டம் முழுதும் சாக்கடை கால்வாய் சீரமைக்கவும், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கவும், மாவட்ட ஊராட்சி குழுவில் இருந்து, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கவுன்சிலர்கள், அவரவர் பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்து விவாதித்து கோரிக்கைகள் வைத்தனர். துணைத்தலைவர் ராஜேந்திரன், செயலர் அருளாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
02-Oct-2024