ரூ. 80க்கு மா ஒட்டு செடி விவசாயிகளுக்கு அழைப்பு
சேலம், நவ. 26-அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், அருநுாற்றுமலை அடுத்த சிறுமலை அரசு தோட்டக்கலை பண்ணை மேலாளர் மதுமிதா வெளியிட்டுள்ள அறிக்கை:சிறுமலையில், 1987 முதல், அரசு தோட்டக்கலை பண்ணை இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகளுக்கு தேவையான தரமான செடிகள், இயற்கை முறையில் உற்பத்தி செய்து, குறைந்த விலையில் விற்கப்படுகிறது. தற்போது நாட்டுரக பாக்கு செடி, நெல்லி ஒட்டு செடி, மா பக்க ஒட்டு செடி, கொய்யா செடி, எலுமிச்சை செடி, கருவேப்பிலை செடி என, 7 வகை செடிகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.இதில், நாட்டுரக பாக்குசெடி ஒன்றின் விலை, 15 ரூபாய். நெல்லி ஒட்டு செடி, 50 ரூபாய், மா பக்க ஒட்டு செடி, 80 ரூபாய். கொய்யா செடி, 40 ரூபாய். எலுமிச்சை, கருவேப்பிலை, மிளகு செடி தலா, 15 ரூபாய். மொத்தமாக, 96,500 செடிகள் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் விபரம்பெற, உதவி தோட்டக்கலை அலுவலரை, 76397 - 80782, 98946 - 78078, 96988 - 83046 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.