உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேங்காய் பருப்பு விலை உயர்வு

தேங்காய் பருப்பு விலை உயர்வு

ப.வேலுார், ப.வேலுார் அருகே, வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை, ஜேடர்பாளையம், பரமத்தி பகுதிகளில் இருந்து, விவசாயிகள் தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர். கடந்த வாரம் நடந்த ஏலத்திற்கு, 7,490 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, 212.99 ரூபாய், குறைந்தபட்சமாக, 180.10 ரூபாய், சராசரியாக, 212.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 13 லட்சத்து, 85 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததுநேற்று நடந்த ஏலத்திற்கு, 13,504 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, 243.99, குறைந்தபட்சமாக, 220.99, சராசரியாக, 240 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 28 லட்சத்து, 89 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை