உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சொத்து வரி நிர்ணயிக்க லஞ்சம் மாநகராட்சி வசூல் ராஜா கைது

சொத்து வரி நிர்ணயிக்க லஞ்சம் மாநகராட்சி வசூல் ராஜா கைது

சேலம் : சேலம், அழகாபுரம் மிட்டாபுதுார், ஆண்டிச்சி நகரை சேர்ந்தவர் ஷாஜூ, 32. இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டுக்கு வரி வசூலிக்க, சேலம் மாநகராட்சி ஐந்தாவது வார்டில், பில் கலெக்டராக பணிபுரியும் கிச்சிபாளையத்தை சேர்ந்த ராஜா, 45, என்பவரை அணுகினார். அப்போது, சொத்து வரி நிர்ணயிக்கும் போது, வரியை குறைவாக விதிப்பதாகவும், அதற்கு, 35,000 ரூபாய் லஞ்சம் தருமாறும் கேட்டுள்ளார். இதில் பேரம் பேசி, 30,000 தந்தால் பணியை முடித்து கொடுப்பதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது.லஞ்சம் கொடுக்க விரும்பாத ஷாஜூ, லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கொடுத்த, ரசாயனம் தடவிய 30,000 ரூபாயை, அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் பில் கலெக்டர் ராஜாவிடம் ஷாஜூ நேற்று காலை வழங்கினார்.அப்போது அலுவலகத்தில், சாதாரண உடையில் நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், கையும் களவுமாக ராஜாவை பிடித்தனர். அவர் இருந்த அறை மற்றும் அவரது பைக் சோதனை செய்யப்பட்டது. பின் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ