உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக்கில் சென்றபோது விழுந்த டிரைவர் பலி

பைக்கில் சென்றபோது விழுந்த டிரைவர் பலி

தாரமங்கலம் :இடைப்பாடி, இருப்பாளி காட்டுவளவை சேர்ந்தவர் சண்முகம், 27 லாரி டிரைவரான இவர், உறவினரை அழைத்துக்கொண்டு, 'ரேடன்' பைக்கில் நேற்று முன்தினம் ஓமலுார் சென்றார். பின் அவரை விட்டு விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். மாலை, 6:30 மணிக்கு சிக்கம்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் வந்தபோது நிலை தடுமாறி விழுந்ததில், தலையில் அடிபட்டது. மக்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அவர் இறந்தது தெரியவந்தது. சண்முகம் மனைவி யசோதா புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை