உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வேன் டயரை கழற்றிய டிரைவர் பரிதாப பலி

வேன் டயரை கழற்றிய டிரைவர் பரிதாப பலி

சேலம்: ஓமலுார், செம்மாண்டப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், 40. இவர், ரவிச்சந்திரன் என்ற கான்ட்ராக்டரிடம் டிரைவராக பணிபு-ரிந்து வந்தார். நேற்று முன்தினம், சூரமங்கலம் அருகே ஓட்டலில் உணவு எடுத்து செல்வதற்காக, வேனில் முருகேசன் வந்துள்ளார். அப்போது சூரமங்கலம் தனியார் பள்ளி அருகே வந்த போது, வேனின் டயர் பஞ்சரானது. இது குறித்து முருகேசன் தனது உற-வினர் ஒருவருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, வேனை சாலை-யோரம் நிறுத்தி டயரை கழற்றும் பணியில் ஈடுபட்டார். பின்னர் அவரது உறவினர் வந்து பார்த்தபோது, அமர்ந்த நிலையில் முரு-கேசன் உயிரிழந்தது தெரியவந்தது. சூரமங்கலம் போலீசார் அவ-ரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவம-னைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை