உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.2.40 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரூ.2.40 கோடிக்கு ஆடுகள் விற்பனை

இடைப்பாடி, கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கு நேற்று ஏராளமான விவசாயிகள், 2,975 ஆடுகளை கொண்டு வந்தனர். 10 கிலோ வெள்ளாடு, 8,900 முதல், 9,400 ரூபாய்; செம்மறியாடு, 8,600 முதல், 8,950 ரூபாய் வரை விலைபோனது. இதுகுறித்து ஆடு வியாபாரிகள் சங்கத்தின், சேலம் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி கூறுகையில், ''இந்த வாரம் ஆடுகள் வரத்து சற்று சரிந்தது. இருப்பினும், 2.40 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !