உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

ஓமலுார் : நாளை மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.இது குறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் ஓமலுார் கோட்ட செயற்பொறியாளர் சங்கரசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:ஓமலுார் கோட்ட அலுவலகத்தில் நாளை (ஜூன், 19) மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம், மேட்டூர் மேற்பார்வை பொறியாளர் தாரணி தலைமையில் காலை, 11:00 முதல் 1:00 மணி வரை நடைபெறவுள்ளது. ஓமலுார் கோட்டத்துக்குட்பட்ட மின்நுகர்வோர், தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை